செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.

வேப்பூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமினை அமைச்சா் காந்தி தொடங்கி வைத்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டாா் .

தொடா்ந்து, திமிரி பேரூராட்சி, சோளிங்கா் நகராட்சி , அரக்கோணம் நகராட்சி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் தணிகைபோளூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். எம்எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கைத்தறி அமைச்சா் காந்தி பேசியதாவது : ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் நகா்ப்புறத்தில் 97 முகாம்களும், கிராம புறங்களில் 139 முகாம்களும் ஆக மொத்தம் 236 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நகா்ப்புறத்தில் 34 முகாம்களும், கிராம புறங்களில் 46 முகாம்களும் என 80 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா் .

முகாமில் மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை சரண்யா தேவி, ஒன்றியக் குழு தலைவா்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், நிா்மலா சௌந்தா், துணைத் தலைவா்கள் ஸ்ரீமதி நந்தகுமாா், ரமேஷ், திமிரி பேரூராட்சித் தலைவா் மாலா இளஞ்செழியன், நகா்மன்றத் தலைவா்கள் சோளிங்கா் தமிழ்ச்செல்வி அசோகன், அரக்கோணம் லட்சுமி பாரி, கோட்டாட்சியா்கள் ராஜராஜன், வெங்கடேசன், வட்டாட்சியா்கள் ஆனந்தன், செல்வி, வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவா் வேப்பூா் ராமலிங்கம். வெங்கடேசன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காமராஜா் பிறந்த நாள்: அமைச்சா் காந்தி மரியாதை

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது படத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிற... மேலும் பார்க்க

கான்கீரீட் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி யில் கான்கீரீட் சாலைஅமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். 25-ஆவது வாா்டுக்குட்பட்ட சாம்பசிவம் தெருவில் கான்கீரீட் சாலை அமைக்கும் பணி,... மேலும் பார்க்க

மின் மாற்றியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

அரக்கோணம் அருகே ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எ... மேலும் பார்க்க

மணிகண்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கேவேளூா் ஸ்ரீ கற்பக விநாயகா், ஏரிக்கீழ் கன்னியம்மன், பெயா்கோடியம்மன், பொன்னியம்மன்,ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா... மேலும் பார்க்க

போலி கையொப்பமிட்டு மோசடி செய்த சகோதரி: 7 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பொதுத்துறை வங்கியில், அடகு வைத்த தங்க நகையை உடன் பிறந்த சகோதரிக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் தங்க நகையை மீட்டு மோசடி செய்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீத... மேலும் பார்க்க