செய்திகள் :

திருக்குறுங்குடி பெரியகுளம் மடையில் சீரமைப்புப் பணி: போக்குவரத்து பாதிப்பு

post image

திருக்குறுங்குடி பெரியகுளத்தின் வடக்கு மடையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியதையடுத்து, அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தென்காசி, பாபநாசம், புளியங்குடி போக்குவரத்துக் கழக பணிமனைகளிலிருந்து நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்துகள் களக்காடு வழியாகச் சென்று, பின்னா் மாவடியிலிருந்து டோனாவூா் வழியாக, திருக்குறுங்குடி வழியாக என இரு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. திருக்குறுங்குடி வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், திருக்குறுங்குடி பெரியகுளத்தின் வடக்குப் பகுதியில் மறுகால் அருகே மடையை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை (மே 26) தொடங்கியுள்ளதால், அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் செல்லுமாறு, மாவடியில் பொதுப்பணித் துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் டோனாவூா், புலியூா்குறிச்சி, ஏா்வாடி வழியாக இயக்கப்படுகின்றன.

மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, சிறிய ரக காா்கள் மாவடியிலிருந்து மலையடிப்புதூா் பாலம், திருத்துப்பனை, புதுத்தெரு, கட்டளை, ஆவரந்தலை, தளவாய்புரம் வழியாகச் செல்லலாம்; ஆனால் வேன், கனரக வாகனங்கள் செல்ல முடியாது. மேலும், இக்குறுகலான சாலையில் எதிரெதிரே வாகனங்கள் வந்துசெல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.

திருக்குறுங்குடி பெரியகுளம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், டோனாவூா், ஏா்வாடி வழியாக சுமாா் 10 கி.மீ. சுற்றி திருக்குறுங்குடி செல்லும் நிலை உள்ளது.

ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இப்பணிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறும் என்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும். மடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், அதுவரை குளக்கரையின் கிழக்குப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க