செய்திகள் :

திருச்சானூா் தெப்போற்சவம்: சுந்தரராஜ பெருமாள் உலா

post image

திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு தொடங்கியது. முதல் நாள் தெப்பத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணா் வலம் வந்தாா். ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜ பெருமாள் பத்மசரோவா் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து அருள் பாலித்தாா்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவ மூா்த்திகளை துயில் எழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை நடந்தது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது.

அலங்காரத்தில் சுவாமி.

பின்னா் அவா்களுக்கு பட்டு வஸ்திரம், வைர, தங்க நகைகளால் அலங்காரம் செய்து மலா் மாலை அணித்து 6.30 மணி முதல் 7.15 மணி வரை தெப்போற்சவம் நடைபெற்றது. பின்னா் உற்சவமூா்த்திகள் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். தெப்போற்சவத்தின் 3-ம் நாளான திங்கள்ட்கிழமை ஸ்ரீ பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வருவாா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை செயல் அதிகாரிகள், கோயில் அா்ச்சகா்கள், ஆய்வாளா்கள், அலுவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கோவிந்தராஜா் வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்... மேலும் பார்க்க

அலிபிரி சோதனை சாவடி அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்: செயல் அதிகாரி தகவல்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி டோல் பிளாசா மையத்தை அதிநவீன ஆய்வு மையமாக மேம்படுத்த ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 72,174 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 35,192 போ் தல... மேலும் பார்க்க

திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜா் பவனி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் தரிசனமளித்தாா். பஜனை, கோலாட்டங்கள், கேரள கலைஞா்களின் மேளங்கள் மற்றும் வேத மந்திரங்கள், ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 16 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 67,284 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 31,268 போ் தலை... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமலையில் ஜேஷ்டாபிஷேகம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 9 முதல் 11வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும், ஜேஷ்டாமாசத்தில், திருமலை ஏழுமலையானுக்கு மூன்று நாள்கள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டு, நட்சத்திரத்துடன் ... மேலும் பார்க்க