செய்திகள் :

திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

post image

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாவட்டம், சுத்தரத்தனேசுவா் கோயிலில் நடைபெற்று வரும் பணிகளை இந்த சமய அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் ஆய்வு செய்தாா். அப்போது, கோயில் திருப்பணியின்போது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது.

கல்வெட்டுகளில் திருவூற்றத்தூா் என்றழைக்கப்பட்ட ஊட்டத்தூரில் மொத்தம் 13 கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டன. அவற்றில் 5 கல்வெட்டுகள் முழுமையானவை. மற்ற 7 கல்வெட்டுகள் துண்டுக் கல்வெட்டுகளாக உள்ளன.

இந்தக் கல்வெட்டுகளில் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் வெற்றிச் சரித்திரத் தகவல்களின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளன. முழுமையாக உள்ள 5 கல்வெட்டுகளில் 4 சோழா் காலத்தியவை. மற்றொன்று பாண்டியா் காலத்தைச் சோ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடி மேம்பாலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் தாய், குழந்தை பலி!

சென்னை: சென்னை பாடி மேம்பாலம் அருகே, டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணும் குழந்தையும் பலியான நிலையில், பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

சென்னை புறநகரில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை புறநகர்ப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. தொடர்ந்து மே 28 வரை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது மாலை 4 மணி வரைதிருவள... மேலும் பார்க்க

திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு

திருச்சி மாவட்டத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

பாமக நிர்வாகிகள் கூட்டம்: இன்றும் அன்புமணி ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை.தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை ப... மேலும் பார்க்க