செய்திகள் :

திருச்சி: கூட்டுறவு வங்கியில் நகை, வைப்புத்தொகை முறைகேடு? வாடிக்கையாளர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

post image

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மத்தியக் கூட்டுறவு வங்கியில் வைப்புத்தொகை வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், மேலாளர் ரவியை அணுகி வைப்பு நிதியை எடுக்கக் கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் சாக்குப்போக்குச் சொல்லி ரவி அவரை அலையவிட்டுள்ளார்.

மத்தியக் கூட்டுறவு வங்கி
மத்தியக் கூட்டுறவு வங்கி

பலமுறை சென்றும் மேலாளர் அந்த வாடிக்கையாளரை அலையவிட்டுள்ளார். இதனால், மேலாளரிடம் அந்த வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல், மற்றொரு வாடிக்கையாளர், தான் அடகு வைத்திருந்த நகையைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

அதேபோல், நகைக்கடன் கேட்டு வந்த இன்னொரு நபரிடம் நகையினைப் பெற்றுக்கொண்டு கடன் தொகையைத் தராமலும் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த அந்த மூன்று வாடிக்கையாளர்களும், மேலாளர் ரவியிடம் விபரம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குச் சரியாகப் பதிலளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லி மழுப்பியிருக்கிறார்.

இதனால், அந்த 3 வாடிக்கையாளர்களின் சந்தேகம் இன்னும் வலுத்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிந்த இந்த மத்தியக் கூட்டுறவு வங்கியின் இதர வாடிக்கையாளர்கள் பலரும் வங்கி முன்பு திரண்டனர். அவர்கள் அனைவரும் வங்கி மேலாளரிடம் சென்று தங்களது வரவு - செலவு விவரங்கள் குறித்துக் கேட்டபோது, அவர்களுக்கும் மேலாளர் முறையான பதிலைச் சொல்லாமல் மழுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் நகை அடகு வைத்த, வைப்புத்தொகை வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்கள் வைப்புத்தொகை மற்றும் அடகு வாய்த்த நகைகளில் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சமடைந்தனர்.

trichy

இதனால், அவர்கள் திரண்டு போய் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தாங்கள் மத்தியக் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளிலும், வங்கியில் செய்த டெபாசிட் தொகையிலும் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகவும், வங்கியின் உயரதிகாரிகள் வங்கிக்கு வந்து இதுகுறித்து உடனே விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதோடு, போராட்டத்திலும் மக்கள் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், மத்தியக் கூட்டுறவு வங்கியின் உயரதிகாரிகள் தொட்டியம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைப்பு நிதியில் மட்டும் ரூ. 3 கோடி வரை மோசடி கையாடல் நடந்திருக்கலாம் என்று வாடிக்கையாளர் தரப்பில் சொல்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ரஷ்யா: கோமாவில் ஒன்றரை வயது குழந்தை; இரக்கமின்றி தாக்கிய கொடூரன்; அதிர்ச்சி வீடியோ - என்ன நடந்தது?

ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணி ஒருவர் ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்ததால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது. குழந்தையின் கபாளத்தில் முறிவு மற்றும் முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க

சென்னை: நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப் பொருள் கொடுத்த கெவின் யார்? - சிக்க வைத்த வாட்ஸ்அப் குரூப்!

கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இது கோலிவுட் வட்ட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவைக் கைதுசெய்த போலீஸ்!

போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23), நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இதே வழக்கு தொடர்பாக, நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் தேட, அவர் தலைமறைவாகி இருந்தார். இவர் இன்று கைது செய... மேலும் பார்க்க

நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சுமார் 20 ... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழ... மேலும் பார்க்க