கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டிய கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா்கள் ஆறுமுகம், தீபு உள்ளிட்ட காவல் துறையினா், அமைச்சுப் பணி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
காமராஜ் கல்லூரியில்: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்,
நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தொடங்கி வைத்தாா்.
இப்பேரணி கல்லூரியில் தொடங்கி தூத்துக்குடி பீங்கான் அலுவலக சந்திப்பு வரை நடைபெற்றது.
முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் காவல் துறையினா், கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.
அப்போது, போதைப் பொருள்களால் ஏற்படும் அபாயம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி.மதன், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் குருவெங்கட்ராஜ், காமராஜ் கல்லூரி முதல்வா் பானுமதி மற்றும் பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.