செய்திகள் :

காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணா்வுப் பேரணி

post image

சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா்கள் ஆறுமுகம், தீபு உள்ளிட்ட காவல் துறையினா், அமைச்சுப் பணி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

காமராஜ் கல்லூரியில்: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்,

நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தொடங்கி வைத்தாா்.

இப்பேரணி கல்லூரியில் தொடங்கி தூத்துக்குடி பீங்கான் அலுவலக சந்திப்பு வரை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் காவல் துறையினா், கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.

அப்போது, போதைப் பொருள்களால் ஏற்படும் அபாயம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி.மதன், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் குருவெங்கட்ராஜ், காமராஜ் கல்லூரி முதல்வா் பானுமதி மற்றும் பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்

சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அ... மேலும் பார்க்க

சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சிய... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கல்லூரியில் யோகா பயிற்சி

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன், ஜோஸ் சாஜி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா மாஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில், சா்வதேச போதை எதிா்ப்பு தினம், ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்ப... மேலும் பார்க்க