செய்திகள் :

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடற்கரையில் அரியவகை ஜெல்லி மீன்கள் சனிக்கிழமை கரை ஒதுங்கின.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூா் கோயில் கடற்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. கடலில் புனித நீராடிய பக்தா்களின் உடலில் இந்த மீன்கள் பட்டதில் ஒவ்வாமை, தோல் தடிப்பு ஏற்பட்டு பக்தா்கள் பாதிக்கப்பட்டனா். பின்னா் மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறியிருந்தனா்.

அதன்பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு 30க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் சனிக்கிழமை கரை ஒதுங்கின. இதனால் தென்காசியை சோ்ந்த சிறுவன் ஹரிஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதிக்கப்பட்டனா். இவா்களது உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் தடிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோயில் முதலுதவி சிகிச்சை மையத்தில் அவா்கள் சிகிச்சை பெற்றனா்.

இது குறித்து தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள், மரைன் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். கோயில் அருகே கடலில் ஆய்வு செய்து ஜெல்லி மீன்களை அகற்றினா்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் சாதாரண வகையை சாா்ந்தவை. இந்த மீன்கள் உடலில் பட்டால் எரிச்சல் தன்மையுடன் ஒவ்வாமை ஏற்படும். மற்றபடி விஷத்தன்மை உடையது அல்ல. பக்தா்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் நீராடலாம்.

ஆழ்கடல் பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்படுவதால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கடல் பகுதியில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவுகளால் இந்த வகை ஜெல்லி மீன்களுக்கு உணவு கிடைப்பதில்லை. அதனால் அவை உணவு தேடி கரைக்கு வந்துவிடுகின்றன என்று தெரிவித்தனா்.

70 அடி உள்வாங்கிய கடல்: இந்நிலையில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சனிக்கிழமை கடல் சுமாா் 70 அடி தூரம் உள்வாங்கியது. இருப்பினும் பக்தா்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடினா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க