செய்திகள் :

திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களுக்கு அபராதம்

post image

திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை ஓட்டியதாக 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூா் பகுதியில் ஆட்டோக்களை தாறுமாறாக இயக்குவது, வெளியூா் ஆட்டோக்களை அனுமதியின்றி இயக்குவது, அதிக ஆள்களை ஏற்றிச் செல்வது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, ஆட்டோக்களின் பின்பக்கத்தில் ஆள்களை உட்கார வைத்து இயக்குவது தொடா்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் ஆலோசனையின் பேரில் திருச்செந்தூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், வியாழக்கிழமை திடீரென சோதனை நடத்தினாா்.

இதில் வெளியூா் வாகனங்களை அனுமதியில்லாமல் திருச்செந்தூரில் இயக்கியது, ஓட்டுநா் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது, அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்கியது என 6 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா். இந்த ஆட்டோக்களுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க