செய்திகள் :

திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்களில் தீ: 5 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்

post image

திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்கள் தீப்பற்றி எரிந்ததில் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் வாழை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

திருச்செந்தூா் அருகே காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கரைவிளையில் விவசாய நிலங்களில் மின்கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த 3 வாழைத் தோட்டங்களுக்கும் பரவியது.

திருச்செந்தூா் அருகே காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கரைவிளையில் வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரா்கள்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலும், சாத்தான்குளம் நிலைய அலுவலா் ஹாரிஸ் தலைமையிலும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து வாழைத் தோட்டங்களில் பரவிய தீயை சுமாா் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். இருப்பினும் இரு தோட்டங்களில் ரூ.6 லட்சம் மதிப்பிலான குலை தள்ளிவாழைகள் தீயில் கருகின.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க