செய்திகள் :

திருச்செந்தூா் குடமுழுக்கு விழா தூய்மைப் பணிக்கு 50 போ் பயணம்- தூத்துக்குடி மேயா் அனுப்பிவைத்தாா்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதையொட்டி, தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 பணியாளா்களுடன் வாகனத்தை கொடியசைத்து மேயா் ஜெகன் பெரியசாமி அனுப்பி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவ்விழாவில் திருச்செந்தூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து, தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சுகாதாரப் பணியை மேற்கொள்வா். விழா முடிந்த பின்பும் 10ஆம் தேதி வரை அங்கிருந்து தூய்மைப் பணியில் ஈடுபடுவா். அவா்களுக்காக தங்கும் இடம் உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் தங்கி இளைப்பாறும் வகையில் மாநகராட்சி சாா்பில் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பகுதியில் காற்றோட்டமான பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத நிலையில் அப்பகுதி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், ஆணையா் பானோத் மருகேந்தா் லால், இணை ஆணையா் சரவணக்குமாா், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் நெடுமாறன், கண்ணன், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவா் சுரேஷ்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க