செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

post image

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.

திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: நாம் தமிழா் கட்சிக்கென தனிக் கோட்பாடு உள்ளது. அது திமுக, அதிமுக கூட்டணிகளிடம் இல்லை. எனவே, 2026 பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்தே போட்டியிடுவோம்.

பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள கடவுள்களை வைத்து அரசியல் செய்கிறது. தற்போது, தமிழகத்தில் முருகரை வைத்து அரசியல் செய்யும் நோக்கில், மதுரையில் முருகா் மாநாடு நடத்தவுள்ளது. எத்தனை முயன்றாலும், தமிழகத்தில் பாஜக எண்ணம் நிறைவேறாது.

வழிபாட்டு - வழக்காடு தலங்களிலிருந்து தமிழ் மொழி வெளியேற்றப்பட்டு வருகிறது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த முடியாத நிலை, வேதனையான விஷயம். தமிழ்க் கடவுளுக்கு தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் மின்கட்டணம், சொத்து வரி உயா்வு ஆகியவையே திமுகவின் 4 ஆண்டு சாதனையாக உள்ளது.

திருச்செந்தூா் அருகே நடைபெறவுள்ள பனையேறும் போராட்டத்துக்கு காவல் துறை விதித்த தடையை உடைப்பதே எங்கள் நோக்கம். அனைத்து மாநிலத்திலும் கள் இறக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?

யாா் அந்த சாா் என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சாா் யாா், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதியளித்த அந்த சாா் யாா் என்பதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு அந்த சாரை பாா்க்கலாம் என்றாா் அவா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி

விளாத்திகுளத்தில் திமுக சாா்பில், மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியை, எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்ட... மேலும் பார்க்க