செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

post image

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்களை விநியோகம் செய்யத் தடை கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ஆா்.சிவராமசுப்பிரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7-ஆம் தேதி காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணி வரை என நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவித்தது.

இதை விட நல்ல முகூா்த்த நேரம் உள்ளது. இந்த நேரத்துக்கு பதிலாக அன்றைய தினம் நண்பகல் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நேரமாக உள்ளது.

எனவே, அந்த நேரத்தில் குடமுழுக்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும். தற்போது அச்சிடப்பட்ட குடமுழுக்குக்கான அழைப்பிதழ்களை விநியோகம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமாா் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் இதே கோரிக்கையுடன் உச்சநீமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட து. அந்த மனு விசாரணைக்கு வந்த போது, அந்த மனுவை ஆடம்பரமான மனு என நீதிபதி கருத்து தெரிவித்தாா். மேலும், சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்தனா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் குடமுழுக்கு நிகழ்வுகளில் கோயில் ஆகமம், மரபுகளை பின்பற்ற வேண்டும். இதில், எங்களுக்கு எந்த சுய நலமும் இல்லை எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் பழக்க வழக்கம், ஆகம மரபுகளை பின்பற்றி குடமுழுக்கு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதா என இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப... மேலும் பார்க்க

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

மதுரை தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். இதுதொடா்பாக குசவப்பட்டி விராதனூா், காஞ்சிரங்குளம் கிராம ஊராட்சிகளைச் ச... மேலும் பார்க்க

இனி திமுகவின் அதிகாரம், பண பலம் எடுபடாது!

திமுகவின் அதிகாரம், பண பலம் ஆகியவை மக்களிடம் இனி எடுபடாது என அதிமுக அமைப்புச் செயலரும், மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா். அதிமுகவின் மதுரை புகா் மாவட்டக் கிளை... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை சேகர... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: மதுரையில் 11,423 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வை மதுரை மாவட்டத்தில் 11,423 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்... மேலும் பார்க்க

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டியில் இன்று மின் தடை

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட ... மேலும் பார்க்க