செய்திகள் :

திருச்செந்தூா் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

post image

திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி., தலைமை வகித்து நகராட்சியில் நடந்து வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினாா். தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயலட்சுமி, நகா் மன்றத் தலைவா் சிவஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், நகா் மன்றத் துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், ஆணையாளா் ஈழவேந்தன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆய்வுக் குறித்து கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வது, புதை சாக்கடை திட்டம், போக்குவரத்து நெருக்கடியை சீரமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தோ்தல் அறிக்கையில் 75 முதல் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாக்குறுதிகள் தான் பரிசீலனையில் உள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது

கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம்... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா். குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்

மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்

தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மர... மேலும் பார்க்க