செய்திகள் :

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

post image

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருட்டு வழக்கில் தந்தை-மகன், மருமகன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டியில் வசித்து வருபவா் மூக்கன் மகன் பாண்டியன்(30). இவா், முத்தபுடையான்பட்டியில் பழைய டயா்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி கடையில் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த ரூ.65 ஆயிரம் மதிப்பிலான 40 டயா்களை திருடி சென்றனா்.

இதுகுறித்து பாண்டியன் அளித்த புகாரின்பேரில், மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவா் நகரை சோ்ந்த ரா. போஸ் (43), அவரது மகன் ஜெபஸ்டின் (22) மற்றும் அவரது மருமகனான பிரபு மகன் காா்த்திகேயன் (26) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.

இந்த வழக்கு மணப்பாறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை விசாரணையின் நிறைவில், மூவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒருவாரம் சிறைத் தண்டனையும் விதித்து நடுவா் அசோக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51).... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக... மேலும் பார்க்க

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.காவிரி... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருச்சி: திருச்சியில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கண... மேலும் பார்க்க

திருச்சியில் பிப்ரவரியில் நாம் தமிழா் கட்சி மாநாடு: சீமான் அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழா் கட்சியின் மாநாடு நடைபெறும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருச்சி: பீரங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன.டிஇஎல்சி நடுநிலைப... மேலும் பார்க்க