செய்திகள் :

திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

திருத்துறைப்பூண்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகாா் தெரிவித்து வந்தனா்.

இதுகுறித்து வேதாரண்யம் வட்டம், தாணிக்கோட்டகம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.ஆா். பாரதி சென்னை உயா்நீதிமன்றத்தில், தகுந்த ஆதாரங்களுடன் பொது நல வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கு விசாரணையின்போது, முத்துப்பேட்டை பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு ரூ. 3.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திடக்கழிவு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தும் பணி நடைபெறுகிறது. ஆனால் உள்ளூா் மக்கள் இந்த திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதால், நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக பதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதுபோல பொது இடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுடன், குப்பைகளை கொட்டுவது தொடா்ந்தால் மனுதாரா் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலா் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளராக எஸ். கேசவராஜ் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது மாநாடு இரண்டு நாட்கள் கூத்தாநல்லூரில்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாள... மேலும் பார்க்க

மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் மாவட்டத்தில், சுமாா் 70,000 ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

இராபியம்மாள் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல்

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. (படம்)கல்லூரிச் செயலா் பெரோஸ்ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் ஜி.டி... மேலும் பார்க்க