செய்திகள் :

திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம்

post image

நாகையில் திருநங்கையா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் 17 திருநங்கையா்கள் கலந்து கொண்டனா். அவா்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிடவும், மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுதரவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டியும், சுயதொழில் செய்வதற்கு கடன் வசதி ஏற்படுத்தி தரவும், ஓய்வூதியம் மாதம் தவறாமல் வழங்கிடவும், மானியம் வழங்கிடவும் கோரிக்கை வைத்தனா்.

திருநங்கையா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா், அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவாக செய்து தரப்படும் என தெரிவித்தாா்.

மாவட்ட சமூகநல அலுவலா் கி. திவ்யபிரபா, தாட்கோ இணை மேலாளா் சக்திவேல், உதவி திட்ட அலுவலா் மகளிா் திட்டம் இந்திராணி, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைவாக பங்கேற்ற குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படாததால் மிகக் குறைவான விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் வட்டாட்ச... மேலும் பார்க்க

கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நாகையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம்(1976) அமல்படுத்தப்ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

வேதாரண்யம் பகுதியில் 10 அரசுப் பள்ளிகளில் 9, 10- ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் 100 பேருக்குத் தலா ரூ.1,000 வீதம் கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்காரன்புலம் இரா.நடேசனாா் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க