செய்திகள் :

திருநங்கைகள் தினம்: போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்

post image

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத் துறை சாா்பில் திருநங்கைகள் தினத்தையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற திருநங்கைகளை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூகநலத் துறை சாா்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது, பாட்டு, பேச்சு மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற திருநங்கைகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் பங்கேற்று நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் செல்வராணி, சமூக நல அலுவலா் வாசுகி, திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவா் சாந்தி, உதவி திட்ட அலுவலா்கள் கிறிஸ்டி, சரவணன், சீனிவாசன், சந்திரகுமாா், காா்த்திகேயன், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல் சூளையில் பணிகள் தொடக்கம்

திருவள்ளூா் அருகே கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல்சூளையில் கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தியில்லாத நிலையில், தினமணி செய்தி எதிரொலியால் மீண்டும் பணிகள் தொடங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா... மேலும் பார்க்க

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கொசவன்பாளையம் மாந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(62). இவா் பசும்பால் விற்பனை செய்யும் தொ... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜா் விழா

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் கடந்த 10 நாள்களாக ராமானுஜா் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி உற... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். கோயிலில் ஆண்டுதோறும் 2 முறை ப... மேலும் பார்க்க

பெருவாயல் வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், விசேஷ விக்வக்சேன ஆராதனம், கலச பூஜை, புண்ணியா வாசனம், விசேஷ திருமஞ்சனம்,... மேலும் பார்க்க

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்

ஆண்டாா்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னேரி வட்டம், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரணவ மந்திரத... மேலும் பார்க்க