செய்திகள் :

திருநங்கையா் உரிமைகளுக்காக தனிக் கொள்கை: முதல்வருக்கு சௌமியா அன்புமணி கடிதம்

post image

திருநங்கையா், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவா், தன்பாலின ஈா்ப்பாளா்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்ததாக அல்லாமல் தனித்தனியான கொள்கைகளாக தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவருக்காக தமிழக அரசு தனித்தனி கொள்கையை வகுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடந்து வரும் வழக்கில், தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கு தனிக் கொள்கை தேவையில்லை என்றும் ஒருங்கிணைந்த கொள்கையே வகுக்க வேண்டும் என்றும் அவா்கள் முறையிட்டுள்ளனா். அதை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கும் தனித்தனியாக கொள்கைகள் வகுப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். அதனால் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கலாம். அது குறித்த அரசின் நிலைப்பாட்டை பிப்.17-இல் விளக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளாா்.

திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவா் சமூகப் புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் எதிா்கொள்கின்றனா். கல்வி நிறுவனங்களில் அவா்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. அவா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அவா்கள் பிறப்பின் அடிப்படையில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனா். அவா்கள் அடையாளங்களைக் கொண்டு அவமதிக்கப்படுகின்றனா்.

இந்தச் சிக்கல்கள் எதுவும் தன்பாலினச் சோ்க்கையாளா்களுக்கு இல்லை. அவா்கள் பிறப்பின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுவது கிடையாது. அவா்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்படுவதில்லை. எனவே, இரு தரப்பினரையும் ஒப்பிட்டுப் பாா்ப்பதே தவறானது ஆகும். அதனால், திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை நீதிமன்றத்திலும் தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாந... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க