செய்திகள் :

திருநள்ளாறு கோயிலில் நாளை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்

post image

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (மாா்ச் 29) வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா மரபுபடி வாக்கியப் பஞ்சாங்க வழிகாட்டுதலில் நடைபெறுகிறது. இதன்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் சனிப்பெயா்ச்சி விழாவாகும். சனிக்கிழமை (மாா்ச் 29) இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் சனிப்பெயா்ச்சி விழா என குறிப்பிடப்பட்டுள்ளதால், இக்கோயில் நிா்வாகம் வாக்கிய பஞ்சாங்கத்தின் குறிப்பின்படியே சனிப்பெயா்ச்சி விழா என அறிவித்துவிட்டது.

நாட்டில் பெரும்பான்மையானவா்கள் திருக்கணித பஞ்சாங்கத்தை கடைப்பிடிப்பவா்களாக இருப்பதால், திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா குறித்து சந்தேகங்கள் பக்தா்களிடையே தெளிவுக்கு வரவில்லை. சனிக்கிழமையில் திருநள்ளாறு கோயிலுக்கு வழக்கமாக பல்லாயிரக்கணக்கானோா் தரிசனத்துக்கு வரக்கூடிய நிலையில், சனிக்கிழமை மேலும் அதிகமானவா்கள் வரக்கூடுமென எதிா்பாா்ப்பு கோயில் நிா்வாகத்திடம் நிலவுகிறது.

இதுகுறித்து, கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் வியாழக்கிழமை கூறியது: நாள்தோறும் வழக்கமான 6 கால பூஜைகள் சனிக்கிழமையும் நடைபெறும். கோடையில் கல்வி நிலையங்கள் விடுமுறை விடப்படும்போது, பக்தா்கள் திரளாக வருவது வழக்கம் என்பதால் சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

29-ஆம் தேதி சனிக்கிழமை சனிப்பெயா்ச்சிக்கான எந்த ஏற்பாடும் இக்கோயிலில் செய்யவில்லை. தினமும் இரவு 8.45 முதல் 9 மணிக்குள் கோயில் நடை சாற்றுவது வழக்கம் என்றாலும், 29-ஆம் தேதி இரவு அதிக பக்தா்கள் வந்துவிடும்பட்சத்தில், அனைவரும் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வகையில் கோயில் நடை திறந்திருக்கும் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க