செய்திகள் :

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

post image

திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசி வருவதால் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்பனை, கூடுதாழை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் சுமாா் 8 ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப் படகு மீனவா்கள் உள்ளனா்.

அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் 4 முதல் 6 மீட்டா் உயரத்திற்கு எழும்புகிறது. எனவே திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீனவளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பை அடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க