செய்திகள் :

திருநெல்வேலி: முதல்வர் திறந்துவைத்தும், மூடியே கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா - பயன்பாட்டுக்கு வருமா?

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நீர் பல்வேறு கால்வாய்கள் மூலம் ஏரிகள், குளங்கள் மற்றும் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் திருநெல்வேலி கால்வாயின் மூலம் நெல்லை நகரில் உள்ள நயினார் குளத்துக்கும் தண்ணீர் வரத்து உள்ளது.

இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதுடன், சுற்றுச்சூழலை அழகுபடுத்தவும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளத்தின் கிழக்கு பகுதியில், அதாவது காய்கறி மார்க்கெட் அருகே, அழகிய நடைபாதை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. எனினும், தற்போது அவை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன.

இதற்கிடையில், நயினார் குளத்தின் தெற்கு பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அழகிய பூங்கா, நடைபாதைகள், நீருற்று, விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் வசதி, உணவக அறைகள், பாதுகாப்பு அறைகள், கழிப்பிட வசதி, வண்ண விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கம்பிவேலி, தடுப்பு சுவர், நடைபாதைகளின் நடுவில் கூடுதல் வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 6-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை திறந்து வைத்தார். ஆனால், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. எனவே, இந்த வசதிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நயினார் குலக்கரை பூங்கா கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.

Kerala: ``நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..'' - SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல... மேலும் பார்க்க

2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! - RBI நடவடிக்கை என்ன?

2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,40... மேலும் பார்க்க

``உங்களுக்கு ஏளனமாக உள்ளதா?'' - நிதிப் பகிர்வு குறித்து நிர்மலா பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

'கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னை... மேலும் பார்க்க

``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,"தமிழ்நாட்டில்,... மேலும் பார்க்க

``அந்த அறையில் பணம் வைத்ததே இல்லை!'' - தன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து நீதிபதி பதில்

கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம். தீயணைப்பு முட... மேலும் பார்க்க

Fair Delimitation: ``தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க