செய்திகள் :

திருபுவனையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

post image

ஊதிய நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் தூய்மைப்பணியில் தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதன்படி அந்தந்தப் பகுதியில் தூய்மைப்பணியாளா்கள் தனியாா் நிறுவனத்தின் மூலம் பணியாற்றி ஊதியம் பெற்று வருகின்றனா்.

இந்தநிலையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இதுகுறித்து அமைச்சா் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

இந்நிலையில், திருபுவனையில் புதுச்சேரி, விழுப்புரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை காலையில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரத் துறை தூய்மைப் பணி வாகனங்கள் உள்ளிட்டவற்றை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் சமரசம் பேசினா். மேலும் அப்பகுதி அரசியல் பிரமுகா்களும் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். தூய்மைப்பணி ஒப்பந்தம் மேற்கொண்ட தனியாா் நிறுவன மேலாளரிடமும் கைப்பேசியில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து ஊதிய நிலுவையை விரைவில் வழங்க நிறுவனம் உறுதியளித்ததால் மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

ரொட்டி, பால் ஊழியா் சங்கத்தினா் 2 -ஆவது நாளாகப் போராட்டம்

புதுவை கல்வித் துறை இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் ரொட்டி, பால் ஆகியவற்றை பள்ளிக் குழந்தைக... மேலும் பார்க்க

புதுச்சேரி தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

புதுச்சேரியில் பிரபல தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரியில் கடலூா் சாலையில... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி நகரில் திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜவுளி வியாபாரி தற்கொலை

புதுச்சேரியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (32). ஜவுளிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 8 மாதங்களு... மேலும் பார்க்க

புதுவையில் 6 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

புதுவை மாநில காவல் துறையில் 6 ஆய்வாளா்களும், சாா்பு ஆய்வாளா் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து புதுவை தலைமையிடக் காவல் கண்காணிப்பாளா் சுபம்ஹோஷ் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி பிஏபி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

மருத்துவமனை நோயாளிகள் கவனிப்புத் தொகையை வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் யாகசம் பெறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க