செய்திகள் :

திருப்பதி ரயில் நிலையத்தில் தீ விபத்து: 2 பெட்டிகள் சேதம்

post image

திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

திருப்பதி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

ஹிஸாா்-திருப்பதி (எண் 04717) எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது. தண்டவாளத்தை மாற்றுவதற்காக நிலையத்துக்கு வெளியே சிறிது தூரம் வந்தபோது தீ பிடித்தது. அப்போது என்ஜின் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா். தீயணைப்பு வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இரண்டு பெட்டிகளில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்ட நிலையில், மீதமுள்ள பெட்டிகளை ரயிலிலிருந்து தனியே பிரித்தனா்.

இந்த தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு அணைக்கப்பட்டதாலும், ரயில் பெட்டிகளில் பயணிகள் இல்லாததாலும் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

விபத்தால் மற்ற ரயில்களின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் 31 அற... மேலும் பார்க்க

ஜூலை 16-இல் ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் பிரேக் தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி அன்று ஆனிவார ஆஸ்தானம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை நினைவுகூரும் வகையில், ஜூலை 15 அன்று கோயில் ஆழ்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து வெளியே சீலாதோரண... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திரு... மேலும் பார்க்க

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

வியாச பௌா்ணமி அல்லது குரு பௌா்ணமியை முன்னிட்டு திருமலையில் வியாழக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது. திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை குரு ... மேலும் பார்க்க