செய்திகள் :

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றது.

எவ்வித பராமரிப்புமின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார சீர்கேடாக காணப்பட்டது. இந்த அலுவலகத்துக்குத் தினமும் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என இரு நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருமானச் சான்றிதழ், நில அளவீடு, அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சான்றிதழ் போன்ற பல தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

அரசு அலுவலகம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதுடன், அவர்களின் தேவைகள் நிறைவேறும் வரை சிலர் இங்கேயே மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படி காத்திருக்கும் பொதுமக்கள் அவசர நேரத்தில்கூட கழிவறை செல்ல முடியாத அவலநிலை இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவியது. குறிப்பாகப் பெண்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.

இது குறித்து அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் கேட்டபோது, ``இந்தக் கழிவறையில் ஒரு நொடிகூட நிற்க முடியாது. உள்ளே கூட செல்ல முடியாது. மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளது. அந்தப் பக்கம் சென்றாலே மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. நாங்கள் எப்படி அவசரத்துக்கு செல்ல முடியும். மற்ற‌ இடங்களில் இதுபோன்று இருந்ததால் அரசு அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுத்தோ அல்ல அந்த விவகாரம் குறித்துப் புகாரளித்தோ தீர்வு காணலாம். ஆனால், அரசு அலுவலகத்திலேயே இப்படி இருந்தால் எங்கு சென்று புகார் செய்வது.

இவ்வளவு பணியாளர்கள் வேலைபார்க்கும் இந்த அலுவலகத்தில் ஒருவர் கூட இதைக் கண்டுகொள்வதில்லை. இவர்கள் முறையாகக் கழிப்பறையைப் பராமரித்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் தற்போதைய திருப்பத்தூர் ஆட்சியர் தர்பகராஜ் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் சென்றார். அப்போது, உடனே கழிவறையைச் சுத்தம் செய்தார்கள். ஆனால், தற்போது மீண்டும் பழைய சூழல் நிலவிக் காணப்படுகிறது" என்றனர்.

இந்த விவகாரம் குறித்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடமும், படிவம் நிரப்பித் தருபவர்களிடமும் பேசியும், நேரடி விசிட் அடித்தும், கழிவறையின் மோசமான நிலை குறித்து விகடன் தளத்தில் "திருப்பத்தூர்: `உள்ள நுழையக்கூட முடியாது’ - வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலையில் கழிவறை..." என்ற தலைப்பில் நவம்பர் 15-ம் தேதி செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும், அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

அதன் எதிரொலியாக, அதிகாரிகள் கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். முக்கியமான அரசாங்க அலுவலகத்தை மக்களின் நலன் கருதி எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை!

``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது '' -பிரதமர் மோடி

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.இந்த பட்ஜெட் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று பெரும் பேசுபொருளாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் ம... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்கர் சொல்வதென்ன?

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 104 இந்தியர்களை முதல் கட்டமாக வெளியேற்றியுள்ளது அமெரிக்கா. அவர்கள் அமெரிக்காவின் சி17 ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்... மேலும் பார்க்க

``சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்..'' -இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவில் ஏற்கெனவே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபரின் உத்தரவின்படி அமெரிக்க ராணுவம் வெளியேற்றிவருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்க... மேலும் பார்க்க

WHO: 'அடுத்தடுத்து விலகும் அமெரிக்கா, அர்ஜென்டினா... அதிகரிக்கும் சீனா-வின் ஆதிக்கம்?' | Explained

கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று, 'உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது' குறித்ததாகும். 'உலக சுகாதார நிறுவனம் கொரோனா பேரிடரை ச... மேலும் பார்க்க

``சீமான் ப்யூர் வலதுசாரி... NTK முன்வைப்பது பாசிசம்!” - VCK ஆளூர் ஷாநவாஸ் பேட்டி

``2002-03 காலகட்டத்தில் பெரியாரை வி.சி.க-வும் கடுமையாக சாடியிருக்கிறதே... எதோ முதன்முதலாக பெரியாரை சீமான்தான் விமர்சிப்பதுபோல பேசுகிறீர்களே!”``பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நாம் ... மேலும் பார்க்க

கள்ள ஓட்டு; திமுக - நாதக இடையே மோதல்... பரபரப்பாக முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்குப்பதிவுஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரக... மேலும் பார்க்க