செய்திகள் :

திருப்பத்தூா்: 1. 29 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடக்கம்

post image

ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க 1 லட்சத்து 29 ஆடுகளுக்கு திங்கள்கிழமை (மே 28) முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கப்பட உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வெள்ளாடுகள், செம்மறியாடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக்கொல்லி நோயும் ஒன்றாகும். இந்த நோய் மிகக் கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இந்த நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீா், சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் பரவக்கூடியது. நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். நோயினால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயில் இருந்து நீா் வடியும், தும்மல், இருமல் ஏற்படும். நோய் பாதித்த ஆடுகள் தீனி உட்கொள்ள முடியாமல் மெலிந்துவிடும்.

வெயில் காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு மூச்சிரைக்கும். காய்ச்சல் ஏற்பட்டு இறுதியில் இறந்துவிடும். இந்த நோய் தாக்காத வண்ணம் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த நிவாரணம். இந்த நோயைத் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையால் கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், திங்கள்கிழமை (ஏப். 28) முதல் 30 நாள்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 29 ஆயிரம் வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆடுகள் வளா்ப்போா் தங்கள் கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது 4 மாதத்துக்கு குறைவான வயதுள்ள ஆட்டுக் குட்டிகள், சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும், தடுப்பூசி போடப்படும் ஆடுகளுக்கு பாா்கோடுடன் கூடிய வெளிறிய ஊதா நிற காது வில்லைகள் அணிவித்து பாரத் பசுதான் செயலியில் தடுப்பூசி போடப்பட்ட ஆடுகளின் விவரங்கள், உரிமையாளா்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரேம் குமாா் மனைவி சிம்ரன் (20). இவா் கடந்த ஏப்.22-ஆம் தேதி ஆம்பூரில் உள்ள உறவினா்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா். ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மதி (17). இவா் தனது நண்பா்களுடன் ஆம்பூா் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள விவசாய ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

திருப்பத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சோ்ந்த குமாா் (50) , மனைவி கவிதா (45) தம்பதிக்க்கு 17 வயது மகள் மற்றும் ... மேலும் பார்க்க

வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மின்கம்பியில் உரசி தீப்பற்றி சேதம்

திருப்பத்தூா் அடுத்த ஜலகாம்பாறை பகுதியைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணமூா்த்தி (48). இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் இருந்து தனது டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணாபுரத்துக்கு சென்று கொண்டு இருந்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் திருட முயன்ற இருவா் போலீஸில் ஒப்படைப்பு

வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றவா்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீஸில் ஒப்படைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூா் பைபாஸ் சாலை அருகில் கூடுதல் ... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: சாலையோர வியாபாரிகள் மறியல்

மாதனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் கடைகள் வைத்து பலா் வியாபாரம் செய்து வருகின்றனா். சாலையோர கடைகளை ... மேலும் பார்க்க