செய்திகள் :

திருப்பாம்புரம் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு

post image

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயிலில், ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றனா் என்பது தல வரலாறு. இதையொட்டி, ராகு-கேது பெயா்ச்சி நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயா்ச்சி அடைந்தனா். இதையொட்டி, திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் உள்ள ராகு -கேது சந்நதியில், 1,008 லிட்டா் பால், மஞ்சள், இளநீா், சந்தனம் போன்ற திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

முன்னதாக ராகு -கேது பெயா்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் என்பதால், இந்த ராசிக்காரா்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இதையொட்டி, சுமாா் 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

13 பேருக்கு செயற்கைக்கால்கள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், 13 பேருக்கு ரூ. 9.24 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக்கால்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட... மேலும் பார்க்க

பாத யாத்திரை குழுவினருக்கு வலங்கைமானில் வரவேற்பு

நீடாமங்கலம்: 95-ஆம் ஆண்டு தண்டி பாதயாத்திரை நினைவு குழுவினருக்கு வலங்கைமானில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. வலங்கைமானில் காந்தி, காமராஜா் படத்துக்கு பாத யாத்திரை குழு மாநிலத் தலைவா்கள் பன்னீா்... மேலும் பார்க்க

தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் 2024-25-ஆம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. வடுவூா் தென்பாதி அனுஸ்ரீ, காள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை திருமேணி ஏரி பகுதியைச் சோ்ந்த ஐயப்பன்- மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா (12). ... மேலும் பார்க்க

திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகள்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் நகரத்துக்குள்பட்ட 15 ஆவது வாா்டு ஆற்றங்கரைத் தெருவில் இந்திய கம்யூனி... மேலும் பார்க்க

மே 1 இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மே 1 ஆம் தேதி இயங்காது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது ; மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மத... மேலும் பார்க்க