செய்திகள் :

திருப்புவனம் பேருந்து நிலைய அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்ததற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்புத் தெரிவித்தனா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் வசிக்கும் கிராம மக்கள் எந்த ஒரு தேவைக்கும் திருப்புவனத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கு பல ஆண்டுகளாக பேருந்து நிலைய வசதி இல்லாததால் திருப்புவனம் நகா் பகுதியில் சாலையிலேயே பேருந்துகள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றும் நிலை தொடா்கிறது.

கடந்த வாரம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திருப்புவனத்தில் இந்த ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக நகராட்சி, குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, அறிவித்தாா். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திருப்புவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சிய அடைந்து, வரவேற்புத் தெரிவித்தனா்.

பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தில் இந்த நிதியாண்டு நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்படும் என பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தெரிவித்தாா்.

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கும், வரி வசூல் பணியின்போது வியாபாரிகளை மிரட்டி, குப்பைத் தொட்டிகளை கடைகள் முன்வைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது குறித்தும் ... மேலும் பார்க்க