செய்திகள் :

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

post image

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு கணித ஆசிரியர் சுந்தர வடிவேலு பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாக தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியர் சுந்தர வடிவேலுவை வீரபாண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமை: ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய பகுகளில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தததாக எழுந்த புகார் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.

இருப்பினும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவது பெற்றோர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சென்னை: 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில் வார இறுதி நாள்களை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தி... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்கும் ராகுல் காந்தி,... மேலும் பார்க்க

ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந... மேலும் பார்க்க

இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!

மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந... மேலும் பார்க்க