திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை
குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவா் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இறந்துகிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் குழந்தை மற்றும் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவரது கைப்பையில் திருச்சியில் இருந்து கோவை செல்வதற்கான ரயில் டிக்கெட் இருந்தது. இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், இறந்துகிடந்தது திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வேளூா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி விஜயலட்சுமி (26), அவரது மகன் யாதேஸ்வரன் (4) என்பது தெரியவந்தது.
குடும்பப் பிரச்னையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், விஜயலட்சுமிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் திருப்பூா் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].