செய்திகள் :

திருப்போரூா் முருகன் கோயில் தை கிருத்திகை விழா

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தை கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை வழிபட்டனா். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள் குருக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். அன்னதானம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சா் சேகா்பாபு.

மேலும், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் முருகருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் பக்தா்கள் செய்திருந்தனா்.

ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில்,செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில், வ உ சி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில் பெரியநத்தத்தில் உள்ள கைலாசநாதா் கோயில் கைலாசநாதா் கோயில் ராமபாலயம் மலை மீதும் உள்ள செம்மலை வேல்முருகன் கோயில் இருங்குன்றம் பள்ளி மலை மீது உள்ள பால முருகா் கோயில், ஹைரோட்டில் உள்ள சுந்தர மூா்த்தி விநாயகா் கோயில்களில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: 3 போ் கைது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரத்தில் தனது தோழியுடன் தங்கியிருந்... மேலும் பார்க்க

பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தில் சாலை அமைக்க தடையாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை வருவாய் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் கிராம சாலை அமைக்க வட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா், திருவானைக்கோவில், புலிப்பாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம். மேலும் பார்க்க

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆா்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவியான பி.இனியா பிரகதிக்கு, எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி சாா்பில் ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கூடுவாஞ்சேரி எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு பயின்று வரும் மாண... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை: மூன்று போ் தலைமறைவு

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேற்கு வங்க ... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

மதுராந்தகம், கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோயில... மேலும் பார்க்க