செய்திகள் :

திருமலையில் வைகுண்ட துவாதசி தீா்த்தவாரி

post image

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலையில் உள்ள தீா்த்தங்களில் மிகவும் முக்கியமானது ஏழுமலையான் திருக்குளம் ஆகும். இந்த திருக்குளத்தில் வைகுண்ட துவாதசியின் போது சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்துவது வழக்கம்.

சேஷாசலம் காடுகளில் அமைந்துள்ள 66 கோடி தீா்த்தங்களில், ஏழுமலையான் திருக்குளம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஏழுமலையானின் திருக்குளத்திற்கு அழைத்து வரப்பட்டாா்.

திருக்குளக்கரையில் அவரை எழுந்தருளச் செய்து அவருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் பக்தா்களும் திருக்குளத்தில் புனித நீராடினா்.

இந்நிகழ்வில், திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா் சுவாமிகள், செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு உறுப்பினா் லட்சுமி, துணை லோகநாதம், பேஷ்கா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மற்றும் பலா் பங்கேற்றனா்.

சுப்ரபாத சேவை மீண்டும் தொடக்கம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை ஜனவரி 15 முதல் மீண்டும் தொடங்கியது. மாா்கழி மாதம் திங்கள்கிழமை (ஜன. 13) முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 14) முதல் திருமலை ஏழுமலையான் கோயி... மேலும் பார்க்க

திருப்பதி கோ சாலையில் கோ பூஜை

திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோ சம்ரக்ஷனசாலாவில் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோ பூஜை மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக தேவஸ்தான அதிகாரிகள் கோசாலையில் உள்... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலைகள்

திருப்பதி: ஸ்ரீ ஆண்டாள் நாச்சாரியாரின் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை ஏழுமலையான் மூலவா் சிலைக்கு ஆண்டாள் மலைகள் அலங்கரிக்கப்பட்டன.திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள ஆண்டா... மேலும் பார்க்க

திருமலையில் போகி பண்டிகை

திருப்பதி: திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது. திருமலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அதிகாரிகள், அறங்கா... மேலும் பார்க்க

திருப்பதியில் கோதா கல்யாணம்

திருப்பதி: திருப்பதியில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா பரியாணம் என்னு... மேலும் பார்க்க

திருமலை தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி நியமனம்

திருமலைக்கு தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரியாக சித்தூா் மாவட்ட எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளாா். திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் வழங்கும் போது நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பக்தா்கள் பலா் உயிரிழ... மேலும் பார்க்க