திருமலையில் 80,440 பக்தா்கள் தரிசனம்
திருமலையில் ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 80,440 போ் தரிசித்தனா்.
பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 80,440 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33,687 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.47 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.