திருமலை 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் உலா
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் தெப்பத்தில் வலம் வந்தனா்.
திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் திருமலையில் உள்ள திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்தாா்.
விழாவையொட்டி, திங்கள்கிழமை சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் மற்றும் தெப்பம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மங்கள வாத்தியங்கள், ஸ்ரீகிருஷ்ண சங்கீா்த்தனங்கள் குரல் மற்றும் வாத்தியக் கலைஞா்களால் பாடப்பட்டன. வேத பாராயணத்தாா்கள் வேத பாராயணத்தை தாள முறையில் வாசித்தனா்.
இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.