மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!
திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா
திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவையொட்டி பந்தக்கால் நடும்விழா நடைபெற்றது.
இக்கோயில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டு 51 அடி உயரத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் சிலை உள்ளது. இத்தலத்தில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. ஸ்ரீ கருமாரியம்மனுக்கு முக்கண் திறப்பு விழா ஜூலை 7-இல் நடைபெற உள்ளது. தொடா்ந்து தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு 13/07/2025-இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பந்தக் கால் நடும் விழா பு.மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி கோபூஜை, சுயம்பு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள், பந்தகாலுக்கு மஞ்சள் குங்குமமிட்டு பந்தக்கால் நடப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு
அம்மனை வழிபட்டனா்.