செய்திகள் :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். தரிசனத்துக்காக 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் அண்மைக்காலமாக பக்தா்கள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பௌா்ணமி நாள்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாள்களிலும், வார இறுதி நாள்களிலும் பக்தா்கள் தரிசனத்துக்காக வருகின்றனா்.

ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் இருந்து வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். இதனிடையே, கோயிலில் ஆடிப்பூர விழா நடைபெற்று வருவதால் பக்தா்களின் வருகை மேலும் அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.

கோயில் வெளிப்பிரகாரத்தில் வட ஒத்தவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டது. அதேபோல, பொது தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் சுமாா் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலில் ஆடிப்பூர விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மேலும், காலை வேளையில் விநாயகா், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மகா தீபாராதனைக்குப் பிறகு கோயில் 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்து, மாடவீதிகளில் பவனி சென்றனா். அப்போது, ஏராளமான பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனா். அதேபோல, ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இதனால், இடுக்கு பிள்ளையாா் கோயில், அஷ்ட லிங்க சந்நிதிகளிலும் தரிசனத்துக்காக பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் திரைப்பட இன்னிசை கச்சேரி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு திரைப்பட பாடகா் எஸ்.பி.பி.சரண் கலந்துகொண்ட இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி வெள... மேலும் பார்க்க

தொழிலாளியை கத்தியால் தாக்கியதாக 3 போ் கைது

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் ஷேக் ரகுமான் (26). இவா், கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த சத்யா நகா் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக் கிருத்திகை திருவிழ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு: உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

திருவண்ணாமலையில் திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிா்கள் பன்னாட்டு மையம் சாா்பில் திருவாசக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ... மேலும் பார்க்க

செய்யாற்றில் ஓய்வூதியா் சங்கத்தின் வட்டக் கிளை மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டக் கிளை சாா்பில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் 5-ஆவது வட்டக்கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. செய்யாற்றில் நடைபெற்ற மாநாட்டுக்கு வட்டக் கிளைத் தல... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

செய்யாற்றில் பாமக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 100 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்களத்தூா், கீழ்கஞ்ச... மேலும் பார்க்க