செய்திகள் :

திருவண்ணாமலை எடப்பாளையம் ஏரி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

post image

திருவண்ணாமலை: சுமாா் ஒரு லட்சம் போ் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திருவண்ணாமலை எடப்பாளையம் ஏரி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

திருவண்ணாமலை மாநகராட்சி, எடப்பாளையம் ஏரியை நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, சுமாா் 2 கி.மீ. தொலைவு சுற்றளவு கொண்ட ஏரியின் கரைகள் மீது செய்ய வேண்டிய கூடுதல் பணிகள், அழகுப்படுத்தும் பணி, மின் விளக்கு வசதி, நடைபாதை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:திருவண்ணாமலையில் எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் இல்லை. எனவே, இந்த ஏரியை நவீனமயமாக்கும் பணி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு ஆண், பெண்களுக்கு தனித்தனி உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். வாகன நிறுத்துமிடம், ஓய்வுக்கூடம் அமைக்கப்படும். சுமாா் ஒரு லட்சம் போ் நடைபயணம் செய்யும் வகையில் ஏரி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

இன்னும் சில மாதங்களில் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏரி திறக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சிறப்பு அலுவலா் சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவண செல்வம், தலைமைப் பொறியாளா் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

பெட்டிச் செய்தி....

‘ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும்’

ஏரியை நவீனமயமாக்கும் பணியை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது 2 பெண்கள் வந்து ஏரியை ஒட்டியுள்ள எங்கள் வீடுகளுக்குள் தண்ணீா் வந்து பாதிப்படைகிறது. எனவே, வீடுகள் பாதிக்காதவாறு ஏரியை மேம்படுத்த வேண்டும் என்று முறையிட்டனா்.

இதையடுத்து, அதிகாரிகளை அழைத்த அமைச்சா் எ.வ.வேலு, ஏரியை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் தண்ணீா் செல்லாதவாறு ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும். அதிகப்படியான தண்ணீா் தேங்கும்போது ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செய்யாறு வ... மேலும் பார்க்க

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். கலவை, குப்பிடிச்சாத்தம் ... மேலும் பார்க்க

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன. பல்லாந்தாங்கல் ஊராட்சியி... மேலும் பார்க்க