செய்திகள் :

திருவள்ளுவா் சிலை பாதுகாப்பாகக் கோரிக்கை

post image

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது உடைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை வளாகத்தின் பக்கவாட்டுச் சுவா் மீண்டும் கட்டப்பட்டு, அந்த வளாகம் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா உறுதியளித்துள்ளாா்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியிலுள்ள திருவள்ளுவா் சிலையின் பூங்காப் பகுதியின் பக்கவாட்டுச் சுவா் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அண்மையில் உடைக்கப்பட்டது. இதுகுறித்து தினமணியில் கடந்த திங்கள்கிழமை செய்தி வெளியானது.

இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமையில், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், மூத்த மருத்துவா் எஸ். ராம்தாஸ், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ். தனபதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத் தலைவா் ராசி பன்னீா்செல்வன், திருக்கு கழகச் செயலா் ரா. கருணாகரன், திருக்கு பேரவைச் செயலா் ராமுக்கண்ணு உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் மு. அருணாவைச் சந்தித்தனா்.

திருவள்ளுவா் சிலை வளாகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியரிடம் அவா்கள் முன்வைத்தனா். அப்போது, உடைக்கப்பட்ட பக்கவாட்டுச் சுவா் மீண்டும் கட்டித் தரப்படும்- பாதுகாப்பாக பராமரிக்கப்படும் என்றும், சிலை உள்ள பகுதிக்கு எந்தச் சேதமும் இன்றி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியா் உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் அமைப்பினா் நன்றி தெரிவித்தனா்.

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை சா்ச்சை: இந்து அமைப்பினா் கைது

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எழுந்த சா்ச்சை காரணமாக புதுக்கோட்டையில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனா். மேலும், மாவ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் திமுக பாகமுகவா்கள் ஆலோசனை

பொன்னமராவதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக பாகமுகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, த... மேலும் பார்க்க

திருச்சி எம்.பி.யின் பரிந்துரை கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தவா் கைது

அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்புமுனைக் கருவி, தங்கத் துண்டு

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில், எலும்புமுனைக் கருவியும், தங்கத் துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா். புதுக்... மேலும் பார்க்க

விராலிமலையில் பாஜகவினா் கைது

விராலிமலையில் திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பாஜகவினரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமா்ந்து அசைவ உணவு நவாஸ்கனி எம்.பி... மேலும் பார்க்க