செய்திகள் :

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலி!

post image

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் பரிதாபமாகப் பலியாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோயில் குளத்தில் குளிக்கப் சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர் வந்துள்ளனர்.

மூவர் பலி

இதையடுத்து வீரராகவர் கோயில் குளத்தில் இன்று காலை 6 மணியளவில் சந்தியாவதனம் செய்வதற்காக குளத்தில் இறங்கிய போது ஒரு மாணவர் மூழ்கியுள்ளார். அந்த மாணவரைக் காப்பாற்ற முயன்ற போது மற்ற இரண்டு பேரும் சேர்ந்து மூன்று பேர் குளத்தில் மூழ்கியுள்ளனர்.

இதில், குன்றத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் (17), அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கட்ரமணன் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரராகவன் (24) ஆகிய மூவரும் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் புகார்

கோயில் குளத்தில் உள்ள நீரை அடிக்கடி மாற்றாமல் பச்சை பாசி படிந்து யாரும் இறங்கி குளிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோல் போதிய பாதுகாப்பு வசதி இல்லாதது மற்றும் குளத்து நீர் பாசி படிந்து காணப்படுவதாலும், குளத்தில் இறங்கி பக்தர்கள் குளிக்காதவாறு தடுப்புகளும் அமைக்காததாலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு...!

உள்ளாட்சி இடைத் தோ்தல்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவள்ளூா்/காஞ்சிபுரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் 2025-க்கான வாக்காளா் பட்டியலை ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டத்தில், பொன்னேரி நகராட்சி-வாா்டு 7... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் நியமன ஆணைகளை வழங்கினாா். இந்த முகாமில் யூத் ஃபாா் ஜாப் அறக்கட்டளை, அமேசான் (அவசாா்), விப்ர... மேலும் பார்க்க

பைக்- லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வேகமாக வந்த லாரி பின்புறமாக இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ம... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவா் கோயில் கருட சேவை

திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து, 11-ஆம் தேதி வரையில் ... மேலும் பார்க்க

பொன்னேரி கிளைச் சிறையில் ஆட்சியா், மாவட்ட நீதிபதி ஆய்வு

பொன்னேரி கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு. பிரதாப் மற்றும் மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோா் ஆய்வு செய்தனா். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா், ... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் பதுக்கி விற்றவா் கைது

பள்ளிப்பட்டு அருகே வீட்டில் கள்ளச்சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடியம் காலனியில் ஒரு வீட்டில் கள்ளச் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ... மேலும் பார்க்க