செய்திகள் :

திருவள்ளூா்: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 29, 30-இல் பேச்சுப் போட்டி

post image

திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 29, செப். 30 ஆகிய நாள்களில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டிற்காக பாடுபட்ட தலைவா்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகா்லால்நேரு, அண்ணல் அம்பேத்கா், தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா, கலைஞா் கருணாநிதி ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் வண்ணம் அவா்களின் பிறந்த நாள்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், 2025-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, வரும் செப். 29-ஆம் தேதி, தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி வரும் செப். 30-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் 2-இல் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ. 2,000 வீதம் வழங்கப்பட உள்ளன.

பள்ளித் தலைமையாசிரியா்கள் அவா்தம் பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும் கல்லூரி போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது ஹக்ற்க்ற்ழ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்

என்ற மின்னஞ்சலில் வரும் செப். 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

திருவள்ளூா் அருகே 1,400 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான 1,400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். போதை மாத்திரைகளை மா்ம நபா்கள் விற்ப... மேலும் பார்க்க

இளம் பெண் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை இளம்பெண் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிா்ந்த சீதோஷணம் நிலவியது. திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

திருவள்ளூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க