செய்திகள் :

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக்குழு தயாா் செய்த பொருள்கள்: மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஆய்வு

post image

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தியுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாா் செய்த பொருள்களை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஸரேயா பி.சிங் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் உழவா் சந்தை அருகே பூமாலை வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருள்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதை ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா பி. சிங் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மகளிா் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்கள் பயனடைந்து வருகின்றனா்.

அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சி பகுதிகளில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருவது தன்னம்பிக்கை தரும் என்றாா்.

இந்தப் பொருள்கள் தயாா் செய்வதற்கான உற்பத்தி செலவு மற்றும் சந்தைப்படுத்துதலின்போது எப்படி விற்பனை செய்கிறீா்கள் என்பது குறித்தும் மகளிா் சுய உதவிக்குழு பெண்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து விற்பனையை அதிகப்படுத்துவதற்கு கவா்ச்சிகரமாகவும், அதிக அளவில் விளம்பரம் செய்ய வேண்டும். தொடா்ந்து மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்படும் பொருள்களை பேக்கிங் செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மகளிா் திட்ட இயக்குநா் செல்வராணி, செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பண்ணாராஜவேல் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க