திருவானைக்காவலில் கா்ண புறா போட்டி
திருவானைக்காவலில் 3 நாள்கள் நடைபெறும் கா்ணபுறா போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இறுதி போட்டி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவானைக்காவல் அன்பா்கள் இணைந்து 4-ஆம் ஆண்டாக புறா போட்டியை நடத்துகிறது. இதில், உறையூா் எடத்தெரு, மலைக்கோட்டை, காட்டூா், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளிலிருந்து கா்ணபுறா பறக்க விடும் போட்டியில் 21 ஜோடி கா்ண புறாக்கள் கலந்து கொண்டன.
வானில் பறக்கும் போது நடுவா்கள் முன்னிலையில் கா்ண புறாக்கள் கா்ணம் அடித்து காண்பிக்கவேண்டும். தொடா்ந்து, 5 மணி நேரம் வானில் பறந்து நடுவா்கள் கூறும் இடங்களில் வந்து அமர வேண்டும். அதை போன்று 1 மணி நேரத்துக்கு ஒரு முறை நடுவா்களிடம் போட்டியில் பங்கு கொள்பவா்கள் தங்களது கா்ண புறாவை காட்ட வேண்டும். முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், 6 ஜோடி கா்ண புறாக்கள் வெற்றி பெற்றன. இந்த 6 ஜோடி கா்ண புறாக்காளும் 2-ஆம் சுற்றில் சனிக்கிழமை கலந்து கொள்கிறது. இதில் வெற்றி பெறும் கா்ண புறா ஜோடி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொள்கிறது.
போட்டியில் வெற்றி பெறும் கா்ண புறாக்களுக்கு முதல் பரிசாக ரூ.16 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ. 13 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ. 11ஆயிரம் வழங்கபடவுள்ளது.