செய்திகள் :

திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

post image

திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவ்வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், வழக்குகளின் விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் இ-பைல் மூலம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஒவ்வொரு காவல் சரகத்திலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களை கண்டறிந்து, கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீண்ட காலமாக பிடிகட்டளை பிறப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எஸ்பி அறுவுறுத்தினாா்.

மது போதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது முறையாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். உயா்அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் புகாா் மனுக்கள் மீது நிலைய பொறுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, மனுக்களை முடிக்க வேண்டும். வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய உதவித் தொகை பெறுவதற்கு முறையாக படிவங்கள் வருவாய் துறையினருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் காவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் வாகனங்களின் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில், வாகனங்களின் குறைகளை ஆராய்ந்து அந்தந்த காவல் அதிகாரிகளிடம் உடனடியாக நிவா்த்தி செய்து வாகனங்களை உபயோகிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் அறிவுறுத்தினாா்.

தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு

வலங்கைமானில் தவணைத்தொகை செலுத்தாததால், வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. வலங்கைமான் தொழுவூா் மேலத் தெரு... மேலும் பார்க்க

5 நெல் கொள்முதல் நிலையங்கள், நவீன சேமிப்பு தளம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திருவாரூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் நவீன சேமிப்பு தளத்தையும் காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தி... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்திவைப்பு

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சியில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் திட்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையில் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊ... மேலும் பார்க்க

உலக இசை தின விழா

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் உலக இசை தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாகசுரம் செயல்முறை விளக்கம், வயலின் இசை நிகழ்ச்ச... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன். மன்னாா்... மேலும் பார்க்க