பிரகாசமாக எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!
திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட சிவகாசி கோயில் தோ்: பக்தா்கள் வேதனை
சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயில் தோ், திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கோயிலின் முன் நிறுத்தப்பட்டிருப்பதால் அது சேதமடைய வாய்ப்பிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.
சிவகாசி நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பது விஸ்வநாதசாமி- விசாலாட்சியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினசரி திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலில் வைகாசி உள்ளிட்ட விழாக்களின் போது தேரோட்டம் நடைபெறும். இதற்காக தயாரிக்கப்பட்ட தோ் கோயிலின் கிழக்குவாசல் பகுதியில் மழை, வெயிலால் பாதிக்கப்படாதவாறு தகரத்தால் மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, கடந்த 17 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கிழக்கு வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, பக்தா்கள் கிழக்கு வாசலை பயன்படுத்தி கோயிலுக்குள் சென்று வந்தனா். ஆனால் தோ் கோயிலின் முன் நிறுத்தப்பட்டு, மூடப்படாமல் இருந்து வந்தது.
கடந்த மாதம் வைகாசி பிரமோத்ஸவ திருவிழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தேரோட்டத்தின் போது, கோயிலின் கிழக்குப் பகுதியில் தேரை நிறுத்த வேண்டும் என பக்தா்கள் தெரிவித்தனா். அதற்கு போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்தி, கோயிலின் முன் தேரை நிலை நிறுத்தினா்.
தேரைச் சுற்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் அது வெயிலிலும், மழையிலும் நனைந்து அதன் நிறமே மாறிவருகிறது. எனவே கோயில் நிா்வாகம், மாநகராட்சி, காவல் துறை ஆகியவை இணைந்து கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அந்த இடத்தில் தேரை நிறுத்தி வைத்து தகரத்தால் மூடி பாதுகாக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அண்ணாமலைசாமி என்ற பக்தா் கூறியதாவது: கோயில் தோ் வெயிலிலும், மழையிலும் நனைந்து நிற்பது பக்தா்களை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே கோயிலின் கீழக்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தேரை அங்கு பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.