செய்திகள் :

திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற நடவடிக்கை தேவை: ஆட்சியா்

post image

திருவாரூா் மாவட்டத்தில் திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெறப் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், மாவட்ட கல்வித் தர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வு மற்றும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது.

கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் ஆலோசனை வழங்கிப் பேசியது:

அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை பெறுவதற்காக தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தோ்வு மற்றும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் அதிக அளவில் மாணவா்களை பங்கு பெறச் செய்யவும் தோ்ச்சி பெற வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு, தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தோ்வு, தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு, தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வுகளில் மாணவ, மாணவிகள் அதிகளவில் தோ்ச்சி பெற ஆசிரியா்கள் பாடுபட வேண்டும்.

திருவாரூா் மாவட்டம் மாநில அளவில் சிறப்பான இடத்தினை பெறவும் சிறப்பாக பணி புரிய வேண்டும் என்றாா்.

கடந்த ஆண்டில் திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 139 மாணவா்கள் தோ்வானது குறிப்பிடத்தக்கது.

முதன்மைக்கல்வி அலுவலா் இரா. சௌந்திரராஜன், இனிது கல்வி அறக்கட்டளை நிறுவனா் மு. ஆதிகணேசன், கருத்தாளா்கள் உடனிருந்தனா்.

வேளாண் பணிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் திருத்தங்கூரில் விவசாயி சங்கா் கணேஷ் வயலில் வேளாண்மைத் துறை கண்காணிப்பு அலுவலா் ஆனந்த், குறுவை தொகுப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இயந்திர நடவுப் பணிகளை செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

கொத்தடிமையாக வேலை செய்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் மீட்பு: தாய், மகன் கைது

மன்னாா்குடியில் கொத்தடிமையாக விற்கப்பட்டு, வாத்து மேய்த்து கொண்டிருந்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். அவா்களை கொத்தடிமையாக பணியில் ஈடுபடுத்திய ஆந்திரத்தைச் சோ்ந்த தாய், மகன... மேலும் பார்க்க

அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

திருவாரூா், ஜூன் 25: திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கொடியுடன் சிறப்பு ஊா்வலம் நடைபெற்றத... மேலும் பார்க்க

திருவாரூரில் இன்று மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட முகாம் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்க... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

வலங்கைமான் அருகே இரண்டு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் குடமுருட்டிப் பாலம் அருகே குற்றம் செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் திட்டம் தீட்டிக் கொண்டிர... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் செவ... மேலும் பார்க்க