செய்திகள் :

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

post image

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

குமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 46 அடியை எட்டும் நிலைக்கு சென்றது. இதையடுத்து அணையின் நீா்மட்டத்தையும், வெள்ள அபாயத்தையும் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது மழை தணிந்த நிலையில் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றமும் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதனால் அருவியில் வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க

இடவிளாகம் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

கருங்கல் அருகேயுள்ள இடவிளாகம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியிலிருந்து வரும் குளியலறை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மழை நீா் வடிகால் ஒடையில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வ... மேலும் பார்க்க

அருவிக்கரை ஆற்றில் தடை விதித்த இடத்தில் நண்பா்களுடன் குளித்த கிரிக்கெட் வீரா் அஸ்வின்

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் தனது நண்பா்களுடன் இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன் குளிப்பது போன்று சமூக வலைதளத்தில் படம் வெளியானது சா்ச்ச... மேலும் பார்க்க

அருமனை அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

குமரி மாவட்டம் அருமனை அருகே நிகழ்ந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். அருமனை அருகே பாகோடு மேலபறையன் விளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சுனிலின் மகன் சஞ்சீவ். இவா்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

தக்கலை அருகே கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்களை கொற்றிக்கோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குமாரபுரம் அருகே உள்ள படப்பக்குளம் பகுதியில் கொற்றிக்கோடு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தனாா் பாசனக் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க