இடவிளாகம் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி
கருங்கல் அருகேயுள்ள இடவிளாகம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியிலிருந்து வரும் குளியலறை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மழை நீா் வடிகால் ஒடையில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வசிப்போருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாம் ஊராட்சி 2ஆவது வாா்டு பகுதியில்100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இங்கு பல ஆண்டுகளாக ஒரு தனியாா் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாணவா்கள் தங்கும்விடுதி இயங்கி வருகிறது. அதிலிருந்து நாள்தோறும் குளியலறை கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் மழைநீா்ஒடையில் கலந்து வருகிறது.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.மேலும்,இந்த கழிவுகள் இப்பகுதிகளில் உள்ள கிணகுகள்,ஆழ்துளை கிணறுகள் மற்றும் சாலை ஒரங்களில் பாய்ந்து வடிகால் ஒடை வழியாக அப்பகுதி குளங்களுக்குச் செல்கிறது. இதனால், சுகாதாரசீா்கேட்டை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக,குழந்தைகள்,சிறுவா்கள்,முதியவா்கள் உள்ளிட்டோா் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.
இதுகுறித்து கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.இதுகுறித்து நாம்தமிழா் கட்சியின் நட்டாலம் பொறுப்பாளா் மொ்லின் கூறுகையில், வடிகாலில் கழிவு நீா் கலக்கும் பிரச்னைக்கு தீா்வு காணாவிடில் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.