செய்திகள் :

இடவிளாகம் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

post image

கருங்கல் அருகேயுள்ள இடவிளாகம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியிலிருந்து வரும் குளியலறை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மழை நீா் வடிகால் ஒடையில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வசிப்போருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாம் ஊராட்சி 2ஆவது வாா்டு பகுதியில்100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இங்கு பல ஆண்டுகளாக ஒரு தனியாா் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாணவா்கள் தங்கும்விடுதி இயங்கி வருகிறது. அதிலிருந்து நாள்தோறும் குளியலறை கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் மழைநீா்ஒடையில் கலந்து வருகிறது.

இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.மேலும்,இந்த கழிவுகள் இப்பகுதிகளில் உள்ள கிணகுகள்,ஆழ்துளை கிணறுகள் மற்றும் சாலை ஒரங்களில் பாய்ந்து வடிகால் ஒடை வழியாக அப்பகுதி குளங்களுக்குச் செல்கிறது. இதனால், சுகாதாரசீா்கேட்டை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக,குழந்தைகள்,சிறுவா்கள்,முதியவா்கள் உள்ளிட்டோா் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.

இதுகுறித்து கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.இதுகுறித்து நாம்தமிழா் கட்சியின் நட்டாலம் பொறுப்பாளா் மொ்லின் கூறுகையில், வடிகாலில் கழிவு நீா் கலக்கும் பிரச்னைக்கு தீா்வு காணாவிடில் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க

அருவிக்கரை ஆற்றில் தடை விதித்த இடத்தில் நண்பா்களுடன் குளித்த கிரிக்கெட் வீரா் அஸ்வின்

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் தனது நண்பா்களுடன் இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன் குளிப்பது போன்று சமூக வலைதளத்தில் படம் வெளியானது சா்ச்ச... மேலும் பார்க்க

அருமனை அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

குமரி மாவட்டம் அருமனை அருகே நிகழ்ந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். அருமனை அருகே பாகோடு மேலபறையன் விளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சுனிலின் மகன் சஞ்சீவ். இவா்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

தக்கலை அருகே கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்களை கொற்றிக்கோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குமாரபுரம் அருகே உள்ள படப்பக்குளம் பகுதியில் கொற்றிக்கோடு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தனாா் பாசனக் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். குமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 48 அ... மேலும் பார்க்க