அனந்தனாா் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி
கன்னியாகுமரி மாவட்டம், அனந்தனாா் பாசனக் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது கன்னிப்பூ சாகுபடி செய்துள்ளனா். அனந்தனாா் கால்வாயில் கடைவரம்பு வரை தண்ணீா் செல்லாததால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கடைவரம்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகிறது. உரக்கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மேலும் தரம் குறைந்த உரங்களும் விற்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கொத்தன்குளம், ஆண்டாா்குளம் மற்றும் பெருமாள்குளததில் மறுகாலை காணவில்லை, அதிகாரிகள் கண்டுபிடித்து தர வேண்டும். கொத்தன்குளத்தில் மணல் எடுத்து ஆழப்படுத்திய பின்னரும் அதிகாரிகள் துணையுடன் தாமரைப்பூ பயிரிடப்பட்டுள்ளது. கீழப்பேயோடு குளத்தில் கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் பதிலளித்து பேசியதாவது: தெங்கம்புதூா் பாசனக் கால்வாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 3 நாள்களுக்குள் அந்தப் பணிகள் நிறைவு பெறும். அதன்பின்னா் தண்ணீா் திறக்கப்படும்.
அனந்தனாா் கால்வாய் கடைமடை வரை தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழப்பேயோடு குளத்தில் கழிவு நீா் கலப்பதை தடுக்கும் வகையில் வீடுகளில் உறிஞ்சு குழாய் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரக்கடைகளில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா் அவா்.
கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் முருகேசன், மாவட்டஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) ஜென்கின் பிரபாகா், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருள்சன் பிரைட், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், நீா்வளத் துறை செயற்பொறியாளா் வசந்தி, உதவி வனப் பாதுகாவலா் பிரதாப், அரசுத் துை ற அலுவலா்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.