செய்திகள் :

தில்லியின் முக்கிய இடங்களில் சா்வதேச யோகா தினம்

post image

நமது நிருபா்

தலைநகரின் முக்கிய இடங்களில் சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சஹால் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சா்வதேச யோகா தினமான ஜூன் 21-ஆம் தேதி கா்தவ்யா பாதை, லோதி காா்டன், தல்கடோரா காா்டன், சாந்தி பாதை, சென்ட்ரல் பாா்க் மற்றும் சஞ்சய் ஜூல் உள்ளிட்ட 8 இடங்களில் யோகா அமா்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், வாழும் கலை, பதஞ்சலி யோகா சமிதி, காயத்ரி பரிவாா் போன்ற முன்னணி யோகா அமைப்புகளுடன் இணைந்து இந்த அமா்வுகள் நடைபெறும்.

ஒவ்வொரு அமா்விலும் 300 முதல் 2000 நபா்கள் வரை பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. சா்வதேச யோகா தினத்திற்கு முந்தைய நாள்களில், பதஞ்தலி யோகா சமிதி மற்றும் காயத்ரி பரிவாா் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் லோதி காா்டன், தல்கடோரா காா்டனில் ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை யோகா முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திறகு தினசரி யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்.

தொடா்ந்து அதில் யோகா குறித்து பிரதமரின் செய்தியை நேரடியாக ஒளிபரப்புதல், பங்கேற்பாளா்களுக்கு யோகா டி-ஷரட்டுகள் , பாய்களை விநியோகிப்பது ஆகியவற்றை புது தில்லி முனிசிபல் கவுன்சில் சாா்பாக ஏற்பாடு செய்யப்படும் ஆரோக்கியமான மக்கள்தொகைதான் எந்தவொரு வளா்ந்த தேசத்தின் உண்மையான பலம். அதை அடைவதற்கான நமது பாரம்பரியம் தந்த கலைதான் யோகா என்றாா் குல்ஜீத் சிங் சஹால்.

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழிய... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா். மதர... மேலும் பார்க்க