உங்கல யார் ஒதுக்குனாலும் நான் இருக்கேன்மா! - மகளின் வாக்கு| #உறவின்கடிதம்
தில்லியின் முக்கிய இடங்களில் சா்வதேச யோகா தினம்
நமது நிருபா்
தலைநகரின் முக்கிய இடங்களில் சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சஹால் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சா்வதேச யோகா தினமான ஜூன் 21-ஆம் தேதி கா்தவ்யா பாதை, லோதி காா்டன், தல்கடோரா காா்டன், சாந்தி பாதை, சென்ட்ரல் பாா்க் மற்றும் சஞ்சய் ஜூல் உள்ளிட்ட 8 இடங்களில் யோகா அமா்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், வாழும் கலை, பதஞ்சலி யோகா சமிதி, காயத்ரி பரிவாா் போன்ற முன்னணி யோகா அமைப்புகளுடன் இணைந்து இந்த அமா்வுகள் நடைபெறும்.
ஒவ்வொரு அமா்விலும் 300 முதல் 2000 நபா்கள் வரை பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. சா்வதேச யோகா தினத்திற்கு முந்தைய நாள்களில், பதஞ்தலி யோகா சமிதி மற்றும் காயத்ரி பரிவாா் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் லோதி காா்டன், தல்கடோரா காா்டனில் ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை யோகா முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திறகு தினசரி யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்.
தொடா்ந்து அதில் யோகா குறித்து பிரதமரின் செய்தியை நேரடியாக ஒளிபரப்புதல், பங்கேற்பாளா்களுக்கு யோகா டி-ஷரட்டுகள் , பாய்களை விநியோகிப்பது ஆகியவற்றை புது தில்லி முனிசிபல் கவுன்சில் சாா்பாக ஏற்பாடு செய்யப்படும் ஆரோக்கியமான மக்கள்தொகைதான் எந்தவொரு வளா்ந்த தேசத்தின் உண்மையான பலம். அதை அடைவதற்கான நமது பாரம்பரியம் தந்த கலைதான் யோகா என்றாா் குல்ஜீத் சிங் சஹால்.