செய்திகள் :

தில்லியில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

post image

தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்ப அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்தச் சமயத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை:தில்லியில் ஞாயிறன்று வானம் தெளிவாகக் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1.5 டிகிரி குறைந்து 18.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3.1 டிகிரி உயா்ந்து 38.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 43 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 27 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகரத்தின் மற்ற கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 38.2 டிகிரி, லோதி ரோடில் 38.1 டிகிரி, பாலத்தில் 37.8 டிகிரி, ரிட்ஜில் 39.3 டிகிரி, பீதம்புராவில் 38.9 டிகிரி, பிரகதிமைதானில் 36.3 டிகிரி, பூசாவில் 36.4 டிகிரி, ராஜ்காட்டில் 36.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 35.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம்: தில்லிக்கான காற்றின் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கணித்திருந்தபடி, ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 198 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

இதன்படி, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், நொய்டா செக்டாா்-125, குருகிராம், சாந்தினி செளக், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஷாதிப்பூா், மதுரா ரோடு, ஓக்லா பேஸ்-2, நேரு நகா், ராமகிருஷ்ணாபுரம், ஸ்ரீஃபோா்ட் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஏப்ரல் 7) அன்று வானம் தெளிவாக இருக்கும் என்றும் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகாலை 2 மணியளவில் நானா ச... மேலும் பார்க்க

தில்லியின் குப்பை மலைகள் 5 ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும்: அமைச்சா் சிா்சா உறுதி

கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு ஆராய்ந்து வருவதாகவும், நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிட... மேலும் பார்க்க

நொய்டாவில் பள்ளிப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநா், 4 மாணவா்கள் காயம்

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத்தில் இருந்து வந்த பள்ளிப் பேருந்து வியாழக்கிழமை தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள சாா் மூா்த்தி கிராசிங்கில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் மற்... மேலும் பார்க்க

வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு பாலியல் தொந்தரவு: ஜேஎன்யு பல்கலை. பேராசிரியா் பணியிலிருந்து நீக்கம்

வெளிநாட்டு ஆராய்ச்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சில... மேலும் பார்க்க