'ADMK - BJP கூட்டணி ஜனவரியில் உடையும்!' - Thirunavukarasar Detailed Interview | ...
தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நான் ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். ஆனால் தில்லி சென்றதுமே அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்று நோக்கத்திலும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் கருத்துகளை எடுத்துச் சொன்னோம்.
என்னுடைய கருத்துகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்ல உரிமை உள்ளது. அவரவருடைய கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கக்கூடிய ஒன்று.
இந்த சந்திப்பின்போது ரயில்வே அமைச்சரும் அங்கு இருந்தார். ஈரோட்டிலிருந்து ஏற்காடு செல்லும் ரயில் முன்கூட்டியே புறப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள், அதன் நேரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அதை பரிசீலிப்பதாக அமைச்சர் சொன்னார்.
மக்கள் பணி செய்வதற்கும் இயக்கம் வலிமை பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று கூறினார்.